சைனோபார்ம் செலுத்தியவர்கள், பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்வது அவசியம்.

சைனோபார்ம் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்கள் 6 மாதங்கள் கடப்பதற்கு முன்னர், பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்வது தொடர்பில் வைத்தியர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சைனோபார்ம் தடுப்பூசியின் வீரியம் 3 மாதங்களுக்குப் பின்னர் குறைவதாகத் தகவல் கிடைத்துள்ளதாக, இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்தியர் ரஜீவ் த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 6 மாதங்களின் பின்னர், மூன்றாவது டோஸ் செலுத்திக் கொள்வது சிறந்தது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.