டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு.

நாடளாவிய ரீதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி ,இம்மாதத்தின் முதல் 04 நாள்களில் மாத்திரம் 505 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என அப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதத்தில், டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,979ஆக பதிவாகியுள்ளது.

இத்துடன் , அடுத்து வரும் சில வாரங்களில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதையடுத்து, நுளம்புகள் பெருகும் இடங்களை ஒழிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.