நான்காவது கொரோனா அலை உருவாகும் ஆபத்து.

மக்கள் பொறுப்புடன் செயற்படவில்லை எனில், நான்காவது கொரோனா அலை உருவாகும் ஆபத்து இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் மேற்கத்திய நாடுகள் டிசம்பர் மாதத்தில் நான்காவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்து உள்ளதாக எதிர்பார்ப்பதாகவும், எனவே கொரோனா இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமாயின் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.