பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. மழையின் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மழையின் காரணமாக தமிழகத்தில் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர்: தொடர் மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் : மாவட்டத்தில் பெய்து வரும்
தொடர் மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவிப்பு.

வேலூர்: மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவிப்பு.

திருவண்ணாமலை: தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் முருகேஷ் உத்தரவு

ராணிப்பேட்டை: கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்கள்.கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்.

சென்னை: கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலம்: தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று(12.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து
மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.