வேலூர் இரட்டைக் கொலையில் திருப்பம்.. நண்பர்களே கொன்றது அம்பலம்..

வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் 24 வயதான விஜய் மற்றும் 24 வயதான நேசகுமார். நண்பர்களான இவர்கள் கடந்த 10ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் தங்கள் மகன்களை பல இடங்களில் தேடி வந்தனர்.

அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் , காட்பாடி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வேலூர் விருதம்பட்டு அருகே போலீசார் திங்கள் கிழமை அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் அந்த வழியாக வந்த விருதம்பட்டை சேர்ந்த 20 வயதான பாலா, 19 வயதான சரத் மற்றும் 17 வயதா சிறுவன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாயமானதாக கூறப்படும் விஜய். நேசகுமார் மற்றும் பாலா. ஆகாஷ், சரத் உட்பட 7 பேரும் நண்பர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விருதம்பட்டு அருகே பாலாற்றங்கரையில் ஒன்றாக கஞ்சா புகைத்துள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் விஜய், நேசகுமார் ஆகியோரை பாலா. ஆகாஷ் உள்பட 5 பேரும் சேர்ந்து கொலை செய்து பாலாற்றின் ஓரம் பள்ளம் தோண்டி புதைத்ததும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக பிடிப்பட்ட பாலா. ஆகாஷ் உட்பட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை தோண்டி எடுக்க உள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.