இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் விலகினார்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிவந்த மிக்கி ஆர்தர் தமது தலைமைப் பயிற்றுவிப்பாளாராகப் பொறுப்பேற்றுள்ளதாக இங்கிலாந்தின் டெர்பிஷெயார் பிராந்தியம் தமது ட்வீட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.

திருப்தியான முறையில் இடமிருந்து தன்னுடனான தொடர்புகள் இருக்கவில்லையென்பதால், தனது மனவிருப்புக்கு மாறான ஒரு முடிவையே எடுத்திருப்பதாக மிக்கி ஆர்தர்க்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மிக்கி ஆர்த்தர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கையின் டெஸ்ட் தொடரின் பின் விலகும் முடிவைக் கடிதம் மூலமாக அறிவித்துள்ளதாக அறியவருகிறது.

பல இளையோரை முன்னுக்கு கொண்டுவருவதில் அர்ப்பணிப்பான பங்களிப்பை வழங்கிய ஆர்தரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்னும் முறையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் இருந்துவருகின்றன.

இவரது விலகல் நிச்சயமாக இலங்கை அணிக்கு இந்த நிலையில் பெரிய இழப்பு என்பது உறுதி.

Leave A Reply

Your email address will not be published.