லண்டன் குடியிருப்பில் தீ : இலங்கையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bexleyheath-ல் உள்ள குடியிருப்பு ஒன்றில், கடந்த வியாழக்கிழமை (18) இரவு ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் தாய், இரு பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோர் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றும் ஒரு நபர் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் வீட்டில் இருந்த பெண்ணின் மைத்துனர் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு தன் பேரக்குழந்தைகளை பார்க்க வந்த ஒரு பெண்ணான, அந்த பிள்ளைகளின் பாட்டியும் தீ விபத்தில் பலியாகியுள்ளார்.

குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரது தாய் இன்றைய (19) தினம் இலங்கைக்கு திரும்ப இருந்தாக சொல்லப்படுகிறது.

தீவிபத்து ஏற்பட்டுள்ள அந்த பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் வீட்டின் முன் கூடி மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.