“சவால்களுக்கு மத்தியில் சுபீட்சத்தின் ஈராண்டு”

ஜனாதிபதியாக இரண்டு ஆண்டுகள் பொறுப்பு காலத்தில், அரசாங்கத்தின் அடைவுகளை முன்னிட்டு –

ஜனாதிபதி ஊடகப் பிரிவு தயாரித்த –

“சவால்களுக்கு மத்தியில் சுபீட்சத்தின் ஈராண்டு” என்ற ஆவண நூலின் மும்மொழிப் பதிப்புகள்,

சிறப்பு காணொளி ஆவணத்தின் இருவெட்டு,

மற்றும் ‘Signature of THE EXECUTIVE’ என்ற சஞ்சிகையின் முதல் பிரதி ஆகியனவற்றை –

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டிஆரச்சி அவர்கள் –

அநுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் வைத்து நேற்று முன்தினம் கையளித்தார்.

தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க உள்ளிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிக்குழாம் அதிகாரிகள் பலர் அப்போது கூட இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.