முல்லைத்தீவை முடக்கியுள்ள படையினர்.

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளாலும் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே வீதிகளில் காணப்பட்ட தடைகளிற்கு மேலதிகமாக வீதிதடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு இராணுவம் மற்றும் பொலிஸாரினால்வீதி சோதனை நடவடிக்கைள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

மாவீரர் துயிலுமில்லங்களை சூழவும் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தண்ணீர்ஊற்றுசந்தி ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் காணப்படும் சுமார் 15க்கும் மேற்பட்ட வீதிதடைகளில் வீதியால் பயணி;ப்பவர்கள் தீடீர் சோதனைகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

வாகனங்கள் சோதனை செய்யப்படுவதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில்அமைந்துள்ள ஆலங்குள் மாவீரர் துயிலும்இல்லம் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் அளம்பில் தேராவில் துயிலும்இ;ல்லங்கள் என மாவட்டத்தில் உள்ள துயிலுமில்லங்களை அண்மித்த வீதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.