வடமராட்சியில் பஸ் மோதி பெண் படுகாயம்!

யாழ்., வடமராட்சி, கரணவாய் தெற்கு – மண்டான் வீதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளானார்.

வாதரவத்தைப் பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா (வயது – 30) என்பவரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளானார்.

படுகாயமடைந்தவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில், நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.