யுவதி உட்பட நால்வர் ஹெரோயினுடன் சிக்கினர்!

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களின் போது யுவதி ஒருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட நகரில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 05 கிராம் 160 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 45 வயதுடைய மீகொட பகுதியைச் சேர்ந்நத நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பொலிஸ் பிரிவில் 05 கிராம் 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 29 வயதுடைய பாணந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 26 வயதுடைய யுவதி ஒருவர் 04 கிராம 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேனமுல்லைப் பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 02 கிராம் 710 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 57 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.