யாழ். தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியது ஒரு மனநோயாளி! குழப்பமடைய வேண்டாம், நாவாந்துறை பங்குத்தந்தை

யாழ்.கோட்டை வாசலில் உள்ள தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு திட்டமிட்ட தாக்குதல் அல்ல. என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார் கூறியிருக்கின்றார்.

இன்று அதிகாலை குறித்த தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

புனித அந்தோணியார் சிற்றாலயம் இன்று அதிகாலை மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் சொரூபங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.குறித்த செயலை செய்தவர் ஏற்கனவே எமக்கு அறிமுகமானவர்.

அவர் ஒரு மனநோயாளி நீண்ட காலமாக இந்த ஆலயத்திலேயே தங்கியுள்ளார் நாங்கள் பல முறை அவரை வெளியேற்ற பார்த்தோம் ஆனால் அவர் போகவில்லை இது வேண்டுமென்று செய்யப்பட்ட ஒரு விடயம் அல்ல.

ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். அவரை பொலிஸார் நேரடியாக கைது செய்துள்ளனர். பின்னர் எனக்கு அறிவித்திருந்தார்கள் நான் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.

அதனுடைய தொடர்ச்சியான நடவடிக்கையினை பொலிஸார் எடுப்பார்கள் எனவே இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என யாரும் குழப்பமடைய தேவையில்லை.

இது ஒரு மன நோயாளியினால் மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதனையும் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல என்பதையும் நான் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.