உயரிய விருது 7வது முறையாக வென்றார் லியோனல் மெஸ்ஸி.

முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு பாலன் டி ஓர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி தொடர்ச்சியாக 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளிலும் இந்த விருதை வென்றார்.

ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு பாலன் டி ஓர் விருது வழங்கப்டுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பாலன் டி ஓர் விருது 2020 ஆம் ஆண்டு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருது நேற்று அறிவிக்கப்பட்டது.

பாரிஸில் நேற்று நடந்த விழாவில் அர்ஜென்டினா அணியின் கேப்டனும் உலகின் முன்னணி கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி இந்த விருதை 7 வது முறையாக தட்டிச்சென்றார். இந்த விருதை, இறுதியாக 2019 ஆம் ஆண்டில் மெஸ்ஸி வென்று இருந்தார்.
முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு பாலன் டி ஓர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி தொடர்ச்சியாக 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளிலும் இந்த விருதை வென்றார். பின்னர் 2015 ஆம் ஆண்டு 5 வது முறையாக அவர் பாலன் டி ஓர் விருதை வென்றார்.
லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இந்த ஆண்டு நடைபெற்ற 15 வது கோபா அமெரிக்கா கால்பந்து பட்டத்தை 28 ஆண்டுகளில் முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது.

விருது வென்ற பின் லியோனல் மெஸ்ஸி கூறியதாவது :
நான் எப்போது ஓய்வு பெறப் போகிறேன் என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கத் தொடங்கினர். ஆனால் இப்போது நான் இங்கே இந்த விருதை பெற்று கொண்டு நிற்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவேன் என எனக்கு தெரியவில்லை.
அர்ஜென்டினா அணிக்கு கோபா அமெரிக்கா கோப்பையை பெற்று தந்ததன் மூலம் என்னுடைய கனவு நினைவானது. அதை எனது சக வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.அதே போல் பெண்களுக்கான பாலன் டி ஓர் விருதை ஸ்பெயின் வீராங்கனை புட்டெல்லாஸ் மூன்றாவது முறையாக வென்றுள்ளார் 27 வயதான புட்டெல்லாஸ், இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர்.

Leave A Reply

Your email address will not be published.