லங்கா பிரீமியர் லீக் இன் இரண்டாவது தொடர் ஆரம்பம்.

லங்கா பிரீமியர் லீக் (LPL) இன் இரண்டாவது தொடர் ஞாயிற்றுக்கிழமை (5) மாலை அதன் சிறப்பு விருந்தினரும் டோக்கியோ பராலிம்பிக் 2020 தங்கப் பதக்கம் வென்றவருமான தினேஷ் பிரியந்த ஹேரத் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடக்க விழாவிற்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கலந்து கொண்டார்.

அழகாக நடனநிகழ்வுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் இலங்கையின் பிரபல இசைக்கலைஞர்களான பதியா மற்றும் சந்துஷ், உமரியா மற்றும் யோஹானி டி சில்வா ஆகியோர் பாடிய தீம் பாடலுடன் அனைத்து அணியினரும் கலந்து கொண்டனர்.

போட்டியின் முதல் ஆட்டம், கடந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு வந்த இரண்டு அணிகளான வெற்றியாளர்களான யாழ் கிங்ஸ், இரண்டாம் நிலை அணியான காலி கிளாடியேட்டர்ஸ் அணியை இரவு 7.30 மணிக்கு எதிர்கொண்டதுடன் ஆரம்பமாகியது.

Leave A Reply

Your email address will not be published.