மிருகங்களுக்கு மத்தியில் இலங்கையரை காப்பாற்ற போராடிய ஓர் மனிதனுக்கு விருது

மத அடிப்படைவாதிகளினால் கொடூரமான முறையில் பிரியந்த குமார தியவதன தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மலிக் அதான் மாத்திரமே தனிநபராக போராடியிருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மலிக் அதானின் மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளது .

கொலையுண்ட இலங்கையர் ஒருவரைக் காப்பாற்ற முயன்றவருக்கு, பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு, துணிச்சலுக்கான இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான தம்கா ஐ ஷுஜாத் (Tamgha i Shujaat) விருதை வழங்குவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

அந்த நபர் மாலிக் அட்னான் என அடையாளம் காணப்பட்டு, அவர் முயற்சிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

“பிரியந்தவைப் பாதுகாக்கவும் காப்பாற்றவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த மாலிக் அட்னானின் தார்மீக தைரியம் மற்றும் துணிச்சலுக்காக நான் தேசத்திற்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன். சியால்கோட்டில் உள்ள கும்பலிடமிருந்து பிரியந்தவைப் பாதுகாக்க அவர் மேற்கொண்ட உடல்ரீதியான முயற்சிகளால் அவரது உயிருக்கு கூட ஆபத்து உள்ளது. அவரது மனிதாபிமான செயலை பாராட்டி தம்கா ஐ ஷுஜாத் விருதை வழங்குவோம், ”என்று பிரதமர் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.