காதலியின் திருமணத்தை நிறுத்த காதலன் செய்த அதிரடி செயல்: அதிர்ச்சியில் மணமகன்

காதலிக்கும் அனைவருமே திருமணம் செய்து கொள்வதில்லை. சில காதல்கள் திருமணத்துக்கு முன்பே முறிந்து விடுகின்றன. அதேபோல எல்லா காதலர்களும் மனமொத்துப் பிரிவதில்லை. குழும்ப சூழல் காரணமாக இருவரில் ஒருவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட விடுகிறது. திருமணம் நிச்சயக்கப்பட்ட காதலியின் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட முடியாதா என்று இறுதி நேரத்தில் காதலர்கள் அதிரடியான பல செயல்களை செய்வார்கள்.

ஏதாவது செய்து காதலியின் திருமணத்தை இறுதி நொடியில் நிறுத்தி, திருமணம் செய்யும் காட்சிகளை திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பார்த்துள்ளோம். ஆனால், நிஜ வாழ்விலும் இதைப் போல ஆச்சரியப்படுத்தும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலியின் திருமணத்தை நிறுத்துவதற்காக அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செயல் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பெரும்பாலான காதலர்களுக்கும் நடப்பது போலவே, இந்த காதலனுக்கும் காதலியை பிரிந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, வேலை காரணமாக வேறு நகரத்திற்கு சென்றிருந்தார் காதலர். இந்த சூழலைப் பயன்படுத்த முடிவு செய்த காதலியின் குடும்பத்தார், அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணத்தை முடிவு செய்து விட்டனர். காதலில் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் தன்னுடைய குடும்பத்தை காதல் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியவில்லை.

போராடிய அவர், வேறு வழி இல்லாததால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். இதைத்தாங்கிக்கொள்ள முடியாத காதலர், திருமணத்தை நிறுத்த வேண்டும் அல்லது காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அனைவரையும் அதிரச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். திரைப்படங்களில் எல்லாம், காதலி அல்லது மனைவியில் நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது உணர்வுபூர்வமான, ரொமான்டிக்காக பார்க்கப்படுகிறது.

வகிட்டில் குங்குமம் வைத்தாலே அவர் காதலனுக்கு சொந்தம் என்றெல்லாம் காட்சிகள் வந்துள்ளன. இந்த மாதிரி திரைப்பட ரொமான்டிக் காட்சிகள் தாக்கத்தில், முன்னாள் காதலனும், காதலியின் முகூர்த்த நேரத்தில் திருமண மண்டபத்தில் நுழைந்து, பாக்கெட்டில் உள்ள குங்குமத்தை எடுத்து காதலியின் நெற்றியில் வைத்தார்.

வர்மலா என்ற சடங்கு வட இந்தியத் திருமணங்களில் மிகவும் முக்கியமான ஒரு சடங்காகும். அந்த சடங்கு நடக்கும் போது தான் முன்னாள் காதலன் மணமகளுக்கு குங்குமம் வைக்கும் சம்பவம் நிகழ்ந்தது. அதைப்பார்த்த மணமகன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருக்கிறார். மணமகளின் குடும்பம், இவ்வாறு செய்த காதலனை அடிக்கத்தொடங்கியது. அதுமட்டுமின்றி போலீசை வரவழைத்து அவர் ஒப்படைக்கப்பட்டார். அந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து சென்ற பிறகு, திருமணம் முடிந்தது.

இந்த காட்சி வீடியோவாக படம்பிடிக்கப்பட்டு சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. வீடியோவை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளார்கள். திரைப்படத்தில் வருவது போன்ற காட்சியை பார்த்து நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இவ்வளவு நடைபெறும் போது அமைதியாக இருந்து, மணமகன் தன்னுடைய மனைவியை பாதுகாத்து இருக்கிறார் என்று பலரும் பாராட்டியுள்ளனர்.

மணமாகாத முன்னாள் காதலனின் ஸ்டண்ட் போலவே, சில மாதங்களுக்கு முன் மத்திய பிரதேசத்திலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அங்கே காதலனுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது அறிந்த அதிர்ச்சியடைந்த திருமணம் நடக்கும் போது, மண்டபத்தில் ‘பாபு பாபு’ என்று கதறி அழுததும் வைரலாக பரவியது.

Leave A Reply

Your email address will not be published.