கைதான இலங்கை மீனவர்கள் விரைவில் விடுதலை!

கைதான இலங்கை மீனவர்கள் நால்வர் எதிர்வரும் 14ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் வாழைச்சேனையில் இருந்து கடலுக்குச் சென்ற 4 கடற்றொழிலாளர்கள் காணாமல்போயிருந்த நிலையில், இந்திய கடற்படையினரால் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மீட்கப்பட்டு தற்போது சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளையடுத்து இந்திய சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதி இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நான்கு மீனவர்களையும் அவர்களின் படகையும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட படகின் உரிமையார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.