நீர்கொழும்பில் தொடரும் விபச்சார விடுதி முற்றுகை! – இருவர் கைது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபச்சார விடுதியை நடத்திவந்த நபரும் விபச்சார விடுதியை நடத்துவதற்கு உடந்தையாக இருந்த பெண்ணுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான 23 வயது பெண், கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.