கல்லடியிலிருந்து காத்தான்குடி வரை கடற்கரை சிரமதானம்….

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23ஆவது படைப் பிரிவின் 231ஆவது படைப் பிரிவின் படையினர், CERI அமைப்பின் தேசிய வேலைத்திட்டப் பணிப்பாளருடன் இணைந்து, கல்லடியிலிருந்து காத்தான்குடி வரையான சுமார் 4 கிலோமீற்றர் நீளமான கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை சனிக்கிழமை மேற்கொண்டனர்.

231 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.எம்.என்.கே.டி பண்டார அவர்களால் CERI அமைப்பின் திரு. E. தர்ஷன் விஜயரத்தினம் அவர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக நிகழ்ச்சியில் அதிகாரிகள், கடற்படை வீரர்கள், பொலிஸார், பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

அனைத்து பங்கேற்பாளர்களும் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் திட்டமிடலுடன் சில மணிநேரங்களில் சிரமதான திட்டத்தை வெற்றிகரமாக முடித்து குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.