தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் கைது?

தமிழகத்தின் அதிமுக முன்னாள் அமைச்சரான கே டி ராஜேந்திர பாலாஜி விரைவில் கைதாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கெனவே இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே டிராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து 6 தனிப்படைகள் அமைத்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே பண மோசடி புகாரில் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் ராஜேந்திர பாலாஜி குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால், விரைவில் அவர் கைதாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.