மாமாவை மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியிலே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை, இன்று (21) காலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணிப் பிரச்சினை காரணமாக மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய தாயின் சகோதரனை (மாமாவை) மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இக் கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.