புத்தளத்தில் ரயிலில் மோதி பெண் மரணம்!

புத்தளத்தில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாரவில பொலிஸ் பிரிவில் கொழும்பு – சிலாபம் ரயில் பாதையில் சிறிய பாலத்துக்கு அருகில் ரயிலில் மோதுண்டு குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.

மாதம்பை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த யுவதி மரணமடைந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக மாதம்பை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.