திருப்பதி சென்றடைந்தார் பிரதமர் மஹிந்த.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இன்று மதியம் 12 மணியளவில் திருப்பதி சென்றடைந்தார். விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்ற அவரை சித்தூர் கலெக்டர் ஹரி நாராயணன் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.

திருமலையில் உள்ள கிருஷ்ணா நிவாஸ் விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறார். நாளை வெள்ளிக்கிழமை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, சாமி படம் மற்றும் பிரசாதங்கள் வழங்குகின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.