மாந்தை கிழக்கு பிரதேச இலக்கிய விழாவும் பிரதேச மலர் வெளியீடும்!

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் மாந்தைகிழக்குப் பிரதேச செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய இலக்கிய விழாவும் பிரதேச மலர் வெளியீடும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ந.ரஞ்சனா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சா. அஞ்சலிதேவி அவர்களும், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சி.சுஜீபா அவர்களும், விருத்தினர்கள் உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா அவர்களும், பிரதேச நில அளவை அத்தியட்சகர் வை.பிறேமதாஸ் அவர்களும், குமாரசாமி வித்தியாலய அதிபர் சு.பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.