பசிலிடம் இருந்து கடுமையான நிபந்தனைகள்! இந்த 3 அமைச்சர்களை தூக்குங்கள்?

புதிய வருடத்தில் அரசாங்கத்திற்கு புதிய முகத்தை கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி, புத்தாண்டில் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கத்தின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசின் பலம் வாய்ந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதற்கு முன்னர் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அரசாங்கம் உரிய அமைச்சர்களுடன் செயற்பட முடியாது எனவும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.