வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம்.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருடன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தொண்டர்களும் இணைந்து வீதி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு நாள் நிகழ்வின் தொடர்ச்சியாக வீதி பாதுகாப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
வீதி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடப்பதன் ஊடாக விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கான அறிவுறுத்தல்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு செய்ய திட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை விழிப்புணர்வு திட்டத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.