குடும்ப ஆட்சி நாட்டை அழிக்கும்: சஜித் தலைமையில் தீவிர பரப்புரை.

நாட்டு மக்கள் நெருப்புடன் கூடிய துன்பத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தயாரிக்கப்பட்ட ‘குடும்ப ஆட்சி நாட்டை அழிக்கும்’ என்ற துண்டுப் பிரசுரத்தை அம்பலாந்தோட்டைப் பகுதியில் இன்று விநியோகம் செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டு மக்கள் நெருப்புக்குப் பதிலாக நெருப்பால் எரிகின்றார்கள்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டொலர் மாபியாவின் கைப்பாவை .

அவர் நாட்டின் அனைத்துப் பிரஜைகளுடனும் ஏற்றுமதியாளர்களுடனும் விளையாடுகின்றார்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் பணியை முன்னெடுத்த ஒருவர் பதவி விலகியுள்ளார்.

எனினும், நாட்டின் பொருளாதாரத்தை அழித்த குற்றத்துக்கான பொறுப்பில் இருந்து அவர்களால் விடுவிக்க முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.