நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர்.

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 25 ஆவது நிகழ்வாக “ ஒலி நூல்களின் இன்றியமையாமையும் அடுத்தகட்ட நகர்வுகளும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல் செயற்றிட்ட வரிசையில் ஏழாவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை ரவீந்திரன் ஆறுமுகம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். ஒருங்கிணைப்பாளராக சுபா பாலசுப்ரமணியம் செயற்படுவார்.

இக்கலந்துரையாடலில் இணைந்து பயனுறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 01.01.2022 சனிக்கிழமை நேரம்- 7.30 pm (இலங்கை நேரம்) இணைப்பு – https://us02web.zoom.us/j/81415584070

Leave A Reply

Your email address will not be published.