கொரோனாவால் பதுளையில் ஒரே நாளில் 6 பேர் பரிதாப மரணம்!

கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் நேற்று ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

பண்டாரவளையில் இருவர், வெலிமடையில் இருவர், ஹப்புத்தளையில் ஒருவர், பசறையில் ஒருவர் என்ற வகையில் அறுவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இம் மரணங்களுடன் பதுளை மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இதுவரையில் 560 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று பதுளை மாவட்ட கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.