திருகோணமலையிலுள்ள 14 எண்ணெய் தாங்கிகள் மேலும் 50 வருடங்கள் LIOCக்கு

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 தாங்கிகளை மேலும் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் 24 டாங்கிகளை பராமரித்து வருகிறது.

மேலும் 61 டாங்கிகள் புதிதாக உருவாக்கப்பட்டு டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிடெட் மூலம் கூட்டாக நிர்வகிக்கப்படுகிறது.

டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெற்றோலியம் கூட்டுத்தாபனம் 51% தையும் , லங்கா ஐ.ஓ.சி 49% பங்குகளையும் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.