கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு – மருத்துவமனை தகவல்.

லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்ட கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சவுரவ் கங்குலி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி டெல்டா பிளஸ் பாதிப்பு என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லேசான அறிகுறி மட்டுமே இருந்ததாகவும் அடுத்த 14 நாட்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் வீட்டுத்தனிமையில் இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் 14 நாட்களுக்கு பிறகு வழக்கமான பணிகளை தொடர்வார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.