வயிற்று வலியால் துடி துடித்த 2 மாத குழந்தை! பதற்றத்தில் தாய் செய்த காரியம்.. ஒரு எச்சரிக்கை தகவல்

இந்தியாவில் வயிற்று வலியால் துடித்த 2 மாத குழந்தைக்கு தவறான மருந்தை கொடுத்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் பகுதியை சேர்ந்த இரண்டரை மாத பச்சிளம் குழந்தை வயிற்று வலியால் துடித்துள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தாய் என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவரை கலந்து ஆலோசிக்காமல் தானாகவே மெடிக்கலில் குழந்தைக்கு வயிற்று வலிக்கு மருந்து வாங்கி கொடுத்துள்ளார்.

இதன்காரணமாக குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இரண்டரை மாத பச்சிளங் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

 

இது போன்று மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்துகளை தானாகவே வாங்கிக் கொடுக்க வேண்டாம் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் பொலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான மருந்தால் 2 மாத கைக்குழந்தை துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.