கொழும்பு துறைமுகநகரின் உல்லாச நடைபாதை திறப்பு….

கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களால் இன்று (9) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிழ்வில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்றிருந்தார். முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வினை அடுத்து புகைப்படக் கண்காட்சியொன்றையும் இலங்கைக்கான சீன தூதரகம், விளையாட்டு அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை, ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட உல்லாச நடைபாதை சில தினங்களுக்கு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிமுகாத்திடலில் ஜனாதிபதி செயலத்திற்கு எதிரில் உள்ள முகப்பின் ஊடாக இதற்குள் பிரவேசிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.