சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை 26 ஆம் திகதி மீள திறக்க தீர்மானம்…

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் கப்பலொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர். வொல்கா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலினால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு உறுதியளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.