ATM இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடித்த நபர் கைது.

வங்கி ATM இயந்திரத்தில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த நபர் கைது.
யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM )இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வங்கியின் ATM இயந்திரத்தில் இருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையில் சந்தேகநபரை அடையாளம் கண்டிருந்த பொலிஸார் , நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் , சுழிபுரம் மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் , அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.