ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் பனுகா.

இலங்கை அணியின் நட்சத்திர இளம் வீரராக திகழ்ந்தவர் பனுகா ராஜபக்க்ஷ. இவர் இலங்கை அணிக்காக 5 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் பங்கேற்றார்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் உடற்தகுதி குறித்து புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால், அதன் காரணமாக பனுகா ஓய்வை அறிவித்துள்ளதாகக் கூறப்பட்டது. குடும்பச் சூழ்நிலை காரணமாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அவர் தெரிவித்தார்.

பனுகா இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என பிரபல வீரர் மலிங்கா கூறினார். இந்நிலையில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் பனுகா.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தேர்வுக்குழுவினரைச் சந்தித்த பிறகு தனது ஓய்வு அறிவிப்பை பனுகா திரும்பப் பெற்றுக்கொண்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.