விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்துக்கு அருகே நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.