வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய பல மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நண்பகல் 12 மணிக்கு காலி மாவட்டத்தின் முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக தேர்தல் அதிகாரிகள் வருகை தருவதில் பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.