தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,40,062 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் மொத்த பாதிப்பு 31,94,260 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது, வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 2,11,270 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 25,221 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,312 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 6,241 பேருக்கும், செங்கல்பட்டில் 1,737 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,763 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.