மகிந்தவின் ATM அட்டையை பாவித்து 30 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த செயலாளர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த உதித லொகு பண்டார, சுமார் 30 மிலியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சவின் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்பொழுது பணம் பெறப்பட்டமை தெரியவந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும், உதித லொகு பண்டார மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக உதித லொகு பண்டார தொடர்ந்தார்.

இந்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற அரசியல்வாதியான டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவின் மகனான உதித லொகு பண்டார, கடந்த பொதுத் தேர்தலில் ஹப்புத்தளை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.