தருமபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு குளம் பகுதியில் நேற்றைய தினம்(25) சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக விசுவமடு இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கல்மடுகுளம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் இடுபட்ட 5 உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகள் ஐவரும் சட்டவிரோதமாக உழவுயிந்திரத்திற்கு மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 4 சந்தேக நபர்களும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களையும், உழவு இயந்திரங்களையும் தருமபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.