கண்டாவளை, இளம் பெண் வைத்தியரை தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைது (Photo & Vioce Video)

கண்டாவளை MOH Dr.Priyaanthini க்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதான தர்மபுரம் பொலீஸ் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

வைத்தியர் தனக்கு கொலை மிரட்டல்விடுக்கப்பட்டதாக தர்மபுரம் போலீசில் முறையிட்டிருந்தார்.


கண்டாவளை பெண் வைத்தியர் பிரியாந்தினிக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்திய வட்டுக் கோட்டையைச் சேர்ந்த பா. கோபாலகிருஸ்ணன் என்பவரே கைதாகியுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதி எடுக்கப்பட்டதை தொடர்ந்து தொலை பேசியில் உரையாடிய நபரைக் இன்று கைது செய்த போலீசார் , அவரை மன்றில் நிறுத்திய போது , கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபரை எதிர்வரும் திங்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று அறிவித்துள்ளது .

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன் மாத்திரமின்றி,  அவரது விடுதிக்கு வாகனத்தில் சென்ற சிலர் அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் தரும்புரம் போலீஸ் நிலையத்தில். முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் ,  அதற்கான விசாரணைகள் தருமபுரம் போலீசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைதாகி விளக்கமறியலில் இருக்கும் , பா. கோபாலகிருஸ்ணன்,  பிரியாந்தினியோடு சர்ச்சையில் ஈடுபட்ட குரல் பதிவு இணைப்பு:

Leave A Reply

Your email address will not be published.