9 வயது சிறுமி நீரில் மூழ்கி பரிதாபச் சாவு.

கேகாலை, நூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஹேன, ரக்கனாவ நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றவர்களில் சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்ஹேட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு தெரணியகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரதே பரிசோதனைக்காக தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.