இதுதான் நீட் ரகசியம்.. கடலூர் பிரச்சாரத்தில் போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்

கடலூரில் உதயநிதி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் மின்விளக்கு சரிந்துவிழுந்து 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கடலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு ரகசியத்தை நான் இப்போது சொல்கிறேன். அது என்னவென்றால், அ.தி.மு.க-வை போல நாங்கள் பா.ஜ.கவுக்கு அடிமையாக இல்லாமல், போராடி வெற்றி பெறுவோம்.

நீட் தேர்வு விவகாரத்தில் அ.தி.மு.க பச்சை அயோக்கியத்தனம் செய்துள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கூட அ.தி.மு.க-வினர் மறைத்துவிட்டனர். நாங்கள் அ.தி.மு.கவை போல கூவத்தூருக்கு சென்று சசிகலாவின் காலை பிடித்து ஆட்சி அமைக்கவில்லை. மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்குகளை பெற்று, வெற்றி பெற்றோம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி தமிழகத்தில் தி.மு.க இருக்கும் வரை, உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடிக்கு சவால் விட்டுள்ளார். இது தி.மு.க-வுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் தி.மு.க ஒரு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.