சுகயீனம் காரணமாக உயிரிழந்த யாசகரின் பையில் இருந்து நான்கு இலட்சம் ரூபா மீட்பு!

தென் மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹக்மன பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த யாசகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் மீடக்கப்பட்டுள்ளது.

குறித்த யாசகரின் காற்சட்டைகளிலிருந்து சுமார் 4 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹக்மன – கொங்கல பகுதியில் வாழ்ந்து வந்த 69 வயதான ஈ.எஸ். விமலதாஸ என்ற யாசகரிடமிருந்தே இவ்வாறு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர் தனது வீட்டுக்கு அருகிலேயே இறந்து கிடந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.