வவுனியாவில் கவிதை நூல் வெளியீடு.

நேற்று மாலை வவுனியா, “சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில்”, கவிஞர் சு.ஜெயச்சந்திரன் அவர்களது ” என் பள்ளிக்கூட உலகம்” எனும் கவிதை நூல் வெளியிடப்பட்டது.

மூத்த இலக்கிய வித்தகர்கள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் உட்பட பெருந்திரளான வாசகர்கள் கலந்திருந்தனர்.

தமிழருவி த. சிவகுமாரன் அவர்கள் தனக்கேயுரிய பாணியில் கவிதை நூலினை பிரிச்சுமேய்ந்திருந்தார். பள்ளிக்கூட உலகத்திற்குள் இலக்கிய உலகத்தை இலாவகமாக சொருகியிருந்தார்.

தமிழ்மணி அகளங்கன் அவர்களால், கல்வியியற்றுறை பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமும் வழங்கப்பட்டது.

நேர்த்தியான முறையில் கலைமகள் அச்சகத்தினர் புத்தகத்தை பதித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.