சுற்றுலாப் பயணி மீது வன்புணர்வு முயற்சி! – ஓட்டோ சாரதி கைது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான 40 வயது பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற ஓட்டோ சாரதியை எல்ல பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

எல்ல நகரிலிருந்து கரந்தகொல்லை உல்லாச விடுதிக்குச் செல்வதற்கு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், ஓட்டோ ஒன்றில் சென்றபோதே, ஓட்டோ சாரதி மனித சந்தடி இல்லாத இடத்தில் ஓட்டோவை நிறுத்திவிட்டு, இப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.

ஓட்டோ சாரதியின் பிடியிலிருந்த தப்பி ஓடிய அமெரிக்காப் பெண் எல்ல பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து முறைப்பாடு செய்துள்ளார். இந்தப் புகாரையடுத்து, எல்ல பொலிஸார் விரைந்து குறிப்பிட்ட ஓட்டோ சாரதியைக் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட ஓட்டோ சாரதி விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபேந்திர வாசனா அபேகுணவர்தன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.