மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து இளைஞர் பலி ! இருவர் படுகாயம் !!

வுவுனியாவில் மரக்காரம்பளை பகுதியில் இன்று காலை 8-45 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாதில் இளைஞர் ஒரு உயிரிழந்தார்

மேலும் இருவர் படுகாயமடைந்தனர் இச்சம்பவத்தில் பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சிறிரஞ்சன் என்ற இளைஞர் சம்பவிடத்தில் உயிரிழந்தார்

மற்றைய இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகினனறனர்

Leave A Reply

Your email address will not be published.