யாத்திரிகர்கள் கொரோனா தடுப்பூசி அட்டை வைத்திருக்க தேவையில்லை….

சிவனொளிபாதமலைக்கு இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்ட பிரதேசங்கள் வழிகளின் ஊடாக யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் கொரோனா தடுப்பூசி அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியமில்லை என இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொகுபோதாகம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொள்வோர் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

எவ்வாறாயினும், கொரோனா தடுப்பூசி அட்டைகளை உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என தெரிவித்த மாலினி லொகுபோதாகம, தடுப்பூசி அட்டை உடன் இருப்பது பாதுாப்பானது எனவும் தெரிவித்தார். மேலும் , பொதுமக்கள் அனைவரும் சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக சுகாதார வழிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.