பிரேசிலில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வு.

பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி ,மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

மேலும் ,ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், காணாமல் போன 126 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.